மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான என். ராஜசேகர் தொடங்கிவைத்து பரிசோதனை செய்துக் கொண்டார். முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் கண் நோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குதாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.