கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி விஜயலட்சுமி (59). இவர் சனிக்கிழமை இரவு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க கடைக்குச் சென்றுவிட்டு, கடலைக்காரத் தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அப்போது பைக்கில் வந்த இருவர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.