காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தச் செய்யும் வகையில், நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் சார்பில், நான் அரசு மருத்துவமனையை உபயோகிக்கிறேன் என்ற ஹேஷ் டேக் மூலம் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராணி முன்னிலை வகித்தார். எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாயில் கிராஅத் ஓதி தொடங்கிவைத்தார். எம்.டபிள்யூ.ஹாமித் ரிஃபாய் அறிமுகவுரையாற்றினார். சமூக ஊடகக் குழும நிர்வாகி எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். டாக்டர் இஸ்மத் வாழ்த்திப் பேசினார். எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நன்றி கூறினார்.