கோவில்பட்டியில் நோயால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியையடுத்த ஜோதி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சண்முகத்தாய் (40). இவர் கடந்த 6 மாதமாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சாணி பவுடரை கரைத்து குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.