நாகஸ்வர கலைஞர்களுக்கு விருது

கோவில்பட்டியில் சிறந்த நாகஸ்வர மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் சிறந்த நாகஸ்வர மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஸ்ரீ நாகஸ்வர செம்மல் கே.பி. பொன்ராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில், முத்தானந்த சுவாமி மடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், நாகஸ்வர வித்வான் பாண்டிகேசவன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், கிங் ரைசர் யோகா ஸ்போர்ட்ஸ் அன்ட் கல்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி பள்ளி நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், ஸ்கேட்டிங் கழக ஆலோசகர் கே.பி. ராஜகோபால் ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தவத்திரு முத்தானந்த சுவாமி மடத்தின் மடாதிபதி சொரூபானந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாகஸ்வர வித்வான் கே. பாலசுப்பிரமணியத்துக்கு சிறந்த நாகஸ்வர மூத்த கலைஞருக்கான விருதை வழங்கி பாராட்டினார்.
கிங் ரைசர் டிரஸ்ட் பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் குமாரகுரு ஆகியோர் வாழ்த்தினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர். சாத்தூரைச் சேர்ந்த தவில் வித்வான் சண்முகவேல் வரவேற்றார். தொழிலதிபர் கதிரேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com