ஆறுமுகனேரியில் தமிழ்நாடு தியாகி கே.டி.கோசல்ராம் பேரவை ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் அ.முத்தீஸ்வரி, திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில் காமராஜர் நினைவு மண்டபம் அருகே உள்ள தியாகிகள் மண்டபத்தில் உள்ள தியாகிகள் பெயர்ப்பட்டியலில், ஆறுமுகனேரியைச் சேர்ந்த விடுபட்ட தியாகிகளின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆலோசகர் கோயில்மணி, செயலர் கோசல்ராம், பொருளாளர் சுந்தரலிங்கம், துணைச் செயலர் மந்திரம், ராஜாராம்மோகன், யோகராஜ், இசக்கிமுத்து, ரெயின்போ சதுரங்க கழக நிறுவனர் முருகேசபாண்டியன், காமராஜர் நற்பணி மன்ற நகரத் தலைவர் சோழர் செல்வின் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.