ஆறுமுகனேரியில் மழை வேண்டி பிரார்த்தனை

ஆறுமுகனேரி ஸ்ரீநடராஜ தேவார பக்தஜன சபை சார்பில் மழை வேண்டி கூட்டு பஜனை மூன்று நாள்கள் நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஸ்ரீநடராஜ தேவார பக்தஜன சபை சார்பில் மழை வேண்டி கூட்டு பஜனை மூன்று நாள்கள் நடைபெற்றது.
லெட்சுமிமாநகரம் ஸ்ரீநடராஜ தேவார பக்த ஜன சபையில் நடைபெற்ற இந்தக் கூட்டு பஜனைக்கு டி.சி.டபிள்யூவைச் சார்ந்த தெரிசை ஐயப்பன் முன்னிலை வகித்தார்.
சபைச்  செயலர் எம். ராமச்சந்திரன்,தெய்வீக சத் சங்கத்தைச் சேர்ந்த ரா.வேலாயுதம், த.ஐ. சிவராஜ், சைவ சித்தாந்த சபைத் தலைவர் ஜெ. சங்கரலிங்கம், ஆறுமுகனேரி அரிமா சங்கத்  தலைவர் ஜெ. நடராஜன், சுப்பிரமணியன், லெட்சுமிமாநகரம் ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆலயபூஜகர் நயினார், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணித் தலைவர் ஜி. ராமசாமி மற்றும் மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டு பஜனையில் மழை பெய்ய வேண்டி மழைக்கான தேவார பதிகங்கள், திருப்பாவை, திருவெம்பாவை, ஐயா வைகுண்டர் சுவாமி பாடல்கள் உள்ளிட்டவைகளை பாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com