பேய்க்குளம் அருகே சின்னமதிக்கூடல் அருள்மிகு ஸ்ரீவிநாயகர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் நிர்வாகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற சிறப்பு 108 திருவிளக்கு பூஜைக்கு மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார். மாவட்ட இந்து முன்னணி தலைவர் வி.எஸ். முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் சுற்று வட்டாரப் பகுதி பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கேற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சின்னமதிக்கூடலில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.