பேருந்து மோதி விவசாயி சாவு

உடன்குடி அருகே திசையன்விளை சாலையில் தனியார் பேருந்து மோதியதில் விவசாயி இறந்தார்.

உடன்குடி அருகே திசையன்விளை சாலையில் தனியார் பேருந்து மோதியதில் விவசாயி இறந்தார்.
பிறைகுடியிருப்பு கீழத்தெருவைச் சேர்ந்தவர் பொ. கோபால் (75). விவசாயியான இவர் சனிக்கிழமை காலையில் ஊரில் இருந்து வெளியே வரும் சாலை வழியாக உடன்குடி-திசையன்விளை பிரதான சாலைக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்தாராம். அப்போது அந்த சாலையில் வந்த தனியார் சொகுசுப் பேருந்து கோபாலின் இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே கோபால் உயிரிழந்தார்.
மெஞ்ஞானபுரம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com