ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 3,006 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் மகா அலங்கார மகா தீபாராதனை, சக்தி கண்ணன் குழுவினரின் மகுட இசை,வில்லிசை, மாலை 5 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு சுமார் திரளான பெண்கள் பங்கேற்ற 3,006 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க அம்மனுக்கு புஷ்ப சஹஸ்ரநாமாவளி அர்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஸ்ரீகாமதேனு குழு வழிபாட்டு மன்றம் மற்றும் ஸ்ரீராஜலட்சுமி குழுவினர் செய்திருந்தனர்.