குலசேகரன்பட்டினம் கோயிலில் 3,006 திருவிளக்கு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 3,006 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 3,006 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் மகா அலங்கார மகா  தீபாராதனை, சக்தி கண்ணன் குழுவினரின் மகுட இசை,வில்லிசை, மாலை 5 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு சுமார் திரளான பெண்கள் பங்கேற்ற 3,006 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க அம்மனுக்கு புஷ்ப சஹஸ்ரநாமாவளி அர்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஸ்ரீகாமதேனு குழு வழிபாட்டு மன்றம் மற்றும் ஸ்ரீராஜலட்சுமி குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com