நாலுமாவடியில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் புத்தாண்டு சிறப்புப் பாடல்கள் பாடினர். புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.
 குருவானவர் குரோவ்ஸ் பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் உடன் ஊழியர் ஏ.அப்பாத்துரை, சகோதரி ஜாய்ஸ் லாசரஸ், டாக்டர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்பட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இயேசுவே வெளிச்சம் என்ற ஆடியோ குறுந்தகடை நாலுமாவடி சேகரகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஜெபிக்க, சாயர்புரம் சேகரகுரு குரோவ்ஸ் பர்னபாஸ் பிரதிஷ்டை செய்ய முதல் பிரதியை அமெரிக்காவாழ் இந்தியர் சுரேஷ்பாபு, இரண்டாவது பிரதியை கனடாவாழ் இந்தியர் ஆபிரகாம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு, மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்.
 ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com