கோவில்பட்டியில் ஆன்மிகச் சொற்பொழிவு

கோவில்பட்டி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் ஸ்ரீ இராமகதா ரஷாம்ருதம் ராமாயண தொடர் சொற்பொழிவு 7 நாள்கள் நடைபெற்றது.

கோவில்பட்டி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் ஸ்ரீ இராமகதா ரஷாம்ருதம் ராமாயண தொடர் சொற்பொழிவு 7 நாள்கள் நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் உள்ள தேவி ஸ்ரீ காயத்ரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆன்மிக சொற்பொழிவை சென்னை சாய்ராம் வாசுதேவன் நடத்தினார். இதையொட்டி, டிச. 27ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை தினமும் மாலை 6 மணி முதல் 6.25 மணி வரை சாய் பஜனை நடைபெற்றது.
மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com