திருச்செந்தூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 23 மாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்து சென்றனர்.
திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் க. ஆடிவேல் தலைமையில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கு. பூவையா, சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட பணியாளர்கள் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 23 மாடுகளை பிடித்துச் சென்றனர். பின்னர் இந்த மாடுகள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பசுக்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.