நாசரேத் ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப மண்டல பூஜை

நாசரேத் ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப மண்டல பூஜை நடைபெற்றது.கோயில் மணியம் நெல்லையப்பன் பூஜையைத் தொடங்கி வைத்தார்.

நாசரேத் ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப மண்டல பூஜை நடைபெற்றது.
கோயில் மணியம் நெல்லையப்பன் பூஜையைத் தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் சிவன் கோயில் மணியம் மது,ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோயிலைச் சுற்றி ஸ்ரீஐயப்ப சுவாமி சப்பர பவனி நடைபெற்றது.
தொடர்ந்து பஜனை நிகழ்ச்சியை அர்ச்சகர் கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது .
இதில் கண்ணன்,திருமலை,ரஞ்சித்,முத்து,சங்கர்,காளிராஜன்,மாயாண்டி,ஆறுமுகம் உள்பட ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோபாலகிருஷ்ணன்,கண்ணன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com