கோவில்பட்டியில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி புதன்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
கோவில்பட்டி போக்குவரத்து காவல் துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியன இணைந்து, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
மாதாங்கோயில் தெரு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி. முருகவேல் தலைமை வகித்து, துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தார். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை பொறுப்பாளர் சேர்மராஜன், ராமசுப்பிரமணியன், போக்குவரத்து போலீஸார் இன்பராஜ், கோபாலகிருஷ்ணன், தங்கமாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைக்கவசம் அணிந்தபடி, இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுநர்களை டி.எஸ்.பி. பாராட்டி இனிப்பு வழங்கினார்.