சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் தானியங்கி சூரியவிளக்குப் பொறி அமைத்து பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரிய விளக்குப் பொறி அமைப்பது குறித்து சடையன்கிணறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் பாலசிங், சூரிய விளக்குப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார்.