ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கணினி போட்டி

ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கணினி போட்டி நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கணினி போட்டி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளமையத்துக்கு உள்பட்ட உயர் தொடக்கப் பள்ளிகளில் டெக்னோ கிளப் உருவாக்கும் வகையிலும், வட்டார அளவிலான தகவல் தொடர்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டி நடைபெற்றது.
குறுவள மைய அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
பரிசளிப்பு விழாவுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் தேவாசீர் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார்.  கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பூபாலன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ராணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com