இந்திய விளையாட்டு குழுமப் பயிற்சி மையத்துக்கு வீரர்கள் தேர்வு

இந்திய விளையாட்டுக் குழுமப் (சாய்) பயிற்சி மையத்தில் சேர இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வீரர்கள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டுக் குழுமப் (சாய்) பயிற்சி மையத்தில் சேர இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வீரர்கள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தடகளம் (இருபாலர்) மேசைப்பந்து (மாணவிகள்) பிரிவுகளில் சேர 1.4.2017 தேதியில் 12 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.   மாணவர்கள் பிரிவில் கால்பந்து, வாலிபால், இருபாலர் பிரிவு ஹாக்கி, கபடி பயிற்சிகளில் சேர 1.4.2017தேதியில் 10 முதல் 14 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தகுதிவாய்ந்த மாணவர், மாணவிகள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இம்மாதம் 11ஆம் தேதிக்குள் அள்ள்ண்ள்ற்ஹய்ற் ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ், நஅஐ பழ்ஹண்ய்ண்ய்ஞ் இங்ய்ற்ழ்ங், சர்.55, ஒ.ச.நற்ஹக்ண்ன்ம், இட்ங்ய்ய்ஹண்-3600 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0461 2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com