12இல் இளையோர் தின பேச்சு போட்டி: முன்பதிவுக்கு அழைப்பு

தூத்துக்குடியில் இம்மாதம் 12 ஆம் தேதி இளையோர் தின பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இம்மாதம் 12 ஆம் தேதி இளையோர் தின பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் கே. ஜவஹர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையமும்,  காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்தும் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளையோர் தின பேச்சுப் போட்டிகள் ஜன. 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது.  "தேசப்பற்றும் தேச நிர்மாணமும்' என்ற தலைப்பில் தமிழில் 5 நிமிட பேச்சுப் போட்டி நடைபெறும். இதில், 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு. போட்டியாளர்கள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு ஜன. 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்குள் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்; பெயரை ஜன. 10 ஆம் தேதிக்குள் 0461-2339278, 95855 03125 ஆகிய தொலைத்தொடர்பு எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com