தூத்துக்குடியில் இளைஞர் கொலை

தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா மகன் சங்கர்ராஜா (28). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர், கடந்த 1 ஆம் தேதி இரவு கலைஞர்நகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 அடங்கிய மர்ம கும்பல் சங்கர்ராஜாவை கம்பு, அரிவாள் போன்றவற்றால் தாக்கிவிட்டு தப்பினர்.
இதில், பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிந்து 6 கும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com