தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா மகன் சங்கர்ராஜா (28). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர், கடந்த 1 ஆம் தேதி இரவு கலைஞர்நகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 அடங்கிய மர்ம கும்பல் சங்கர்ராஜாவை கம்பு, அரிவாள் போன்றவற்றால் தாக்கிவிட்டு தப்பினர்.
இதில், பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிந்து 6 கும்பலை தேடி வருகின்றனர்.