நாலுமாவடியில் 16, 17இல் பொங்கல் கபடிப் போட்டி

தமிழர் திருநாளை முன்னிட்டு ஆண், பெண் மின்னொளி கபடிப் போட்டிகள் நாலுமாவடியில் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தமிழர் திருநாளை முன்னிட்டு ஆண், பெண் மின்னொளி கபடிப் போட்டிகள் நாலுமாவடியில் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத்துறை சார்பில்  அங்குள்ள காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு மாவட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
 போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி பி.கணேசன், பொதுமேலாளர் செல்வக்குமார், விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் மணத்தி எட்வின், ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com