புத்தாண்டின் முதல் வெள்ளி: ஆலந்தலை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபியில் புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபியில் புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதற்கு கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமை வகித்து உரையாற்றினார். பங்குத்தந்தைகள் வீரபாண்டியன்பட்டணம் ஆண்ட் ரு டீரோஸ், உவரி ஜோசப், மணப்பாடு கிளாரன்ஸ், தூத்துக்குடி பிரதிபன், ஹெர்மஸ், பங்கிராஸ், கூடுதாழை ரஞ்சித், பெரியதாழை ஆண்ட்ரூஸ் செல்வன், உதவி பங்குத்தந்தை ஜேசுதாஸ், கூட்டப்பனை பிரைட் மச்சாது உள்ளிட்ட ஏராளமானோர். தொடர்ந்து அசன விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை  ஆலயப் பங்குத்தந்தை வில்சன், அருள்சகோதரிகள், பக்த சபையினர், ஊர்நல கமிட்டியினர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com