கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் ஓவியப் போட்டி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 7ஆவது தேசிய வாக்காளர் தினம் இம்மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் பாலகணேசன், மண்டல துணை வட்டாட்சியர் மாடசாமி, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு இம்மாதம் 25ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com