ஆத்தூரில் ஸ்ரீ இராமானுஜரின் ஆயிரமாவது அவதார தின விழாவையொட்டி ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இதையொட்டி, ஆத்தூர் மேல ரதவீதியில் உள்ள தனியார் அரங்கில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமியின் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.