கார் - பைக் மோதல்: முதியவர் சாவு

கோவில்பட்டி புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது கார் மோதியதில் முதியவர் இறந்தார்.

கோவில்பட்டி புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது கார் மோதியதில் முதியவர் இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அய்யனன் மகன் ராஜமாணிக்கம் (65). இவர், பைக்கில் கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் அருகே சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், பைக் மீது மோதியதில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் மதுரை பிரியங்கா அவென்யூ மல்லிகை வீடுகளைச் சேர்ந்த ம. குமரனை (30) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com