தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பார்த்திபராஜா மனைவி கோமதி (23). இவர், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு தனது மாமியாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென கோமதி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com