ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு பை பெறலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.10) முதல் பொங்கல் பரிசு பைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.10) முதல் பொங்கல் பரிசு பைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைகள், காவலர் குடும்ப அட்டைகள் மற்றும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் என மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 878 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, சீனி ஒரு கிலோ, முந்திரி பருப்பு 20 கிராம், கிஸ்மிஸ் பழம் 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் கரும்புத்துண்டு (2 அடி) ஒரு எண்ணம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள்  பொங்கல் பரிசை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com