உடன்குடி பள்ளிவாசலில் கந்தூரி விழா

உடன்குடி பெரிய தெரு முஹ்யித்தீன் (ரலி) ஆண்டவரின் 877 ஆவது கந்தூரி விழா கொண்டாடப்பட்டது.

உடன்குடி பெரிய தெரு முஹ்யித்தீன் (ரலி) ஆண்டவரின் 877 ஆவது கந்தூரி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கொடிச்சுற்று, கொடியேற்றம் இரவு 10 மணிக்கு மௌலூது ஷரீபு ஆகியவை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலையில் வரி, காணிக்கை நேர்ச்சைகளுக்கு பள்ளிவாசலில் உணவு வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மௌலூது ஷரீபு ஓதப்பட்டது. தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள், பெரியதெரு பள்ளிவாசல் இமாம் ஹமீது சுல்தான் தலைமையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மஸ்ஜித் லஜ்துல் முஹ்ஸிறீன் தலைமை இமாம் ஃப்க்ருத்தீன் ஃபாஜில் பாக்கவி பங்கேற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஜமாஅத் தலைவர் முகம்மது பதிருதீன் தலைமையில் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com