சாத்தான்குளம் அருகே குப்பையை எரிக்கும் போது காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.
தெற்கு பன்னம்பாறையைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி இசக்கித்தாய் (29). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இசக்கித்தாய் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை இசக்கித்தாய், அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள குப்பையில் மண்ணெண்ணெயை ஊற்றி எரித்தாராம். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியதாம். இதில், பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.