கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் இளஞ்சுழற் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலிக்கு ரோட்டரி ஆளுநர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி. முருகவேல் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். போக்குவரத்து காவல் உதவி -ஆய்வாளர் நந்தகோபால், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளஞ்சுழற் சங்க மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். வாகன ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு அடங்கிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். அதிக ஒளி வீசுவதை தடுக்கும் வகையில், வாகன விளக்கின் மையப்பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.