கார் மீது வேன் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் காயம்

திருச்செந்தூரில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.

திருச்செந்தூரில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 12 பேர், வேனில் சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ராமேசுவரம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது, எதிரே வந்த கார் மீது வேன் மோதி கவிழ்ந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் காயமடைந்தனர். வேன் மற்றும் கார் சேதமடைந்தன. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com