உடன்குடி சந்தையடியூர் அய்யா நாராயண சுவாமி கோயிலில் பால்முறைத் திருவிழா தொடங்கியது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அய்யா அன்ன வாகனத்திலும், புதன்கிழமை காலை 8 மணிக்கு ஸர்ப்ப வாகனத்திலும் பவனியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உச்சிகால பூஜை, தர்ம பிச்சை எடுத்தலும், நள்ளிரவு அய்யா குதிரை வாகனத்தில் பவனியும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் உம்பான் தர்மம் வழங்கல், மாலையில் சரவிளக்கு பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து, அய்யா கருட வாகனத்தில் பவனியும், வெள்ளிக்கிழமை சந்தனக்குடம் எடுத்தல், இரவு 8 மணிக்கு அய்யா அனுமார் வாகனத்தில் பவனியும், சனிக்கிழமை பால் வைத்தல், அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளலும், ஞாயிற்றுக்கிழமை பூச்சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.