தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். வட்டச் செயலர் சின்னத்தம்பி, சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலர் அரிபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார்.
வட்டச் செயலர் பொன்சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் தலைவர் கு.ஜெயபால், சாத்தான்குளம் வட்ட சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் அந்தோணி தமிழ்ச்செல்வன், வருவாய்த் துறை அலுவலர் சங்கத் தலைவர் கோவிந்தன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சித்ரா, சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர் சுராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com