கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த இளம்பெண் புதன்கிழமை இறந்தார்.
கயத்தாறையடுத்த அரசன்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சு.மாரியப்பன். இவரது மனைவி சுமதி (35). மாரியப்பன் மனைவி சுமதியுடன் கடந்த 8ஆம் தேதி பைக்கில் சென்றபோது, கயத்தாறு புறவழிச் சாலையில் பள்ளி அருகேயுள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கையில் சுமதி தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனர்.