திருச்செந்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). ஆட்டோ ஓட்டுநர். இவர், புதன்கிழமை அப்பகுதியிலிருந்து பவித்ரன் என்ற பயணியை ஏற்றிக்கொண்டு, திருச்செந்தூருக்கு சென்றுகொண்டிருந்தாராம். ராமசாமிபுரம் பகுதியில் வந்த போது ஆட்டோ, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த முருகேசன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தூத்துக்குடிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
காயமடைந்த பவித்ரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் இறந்த முருகேசனுக்கு மனைவி ராணி (42), ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
விபத்து குறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.