தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் தங்கமாரியப்பன்(35) தலைமையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 23 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், அங்கு சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 23 பேரையும் கைது செய்தனர்.