தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நற்பணிக் குழு சார்பில் நடைபெற்ற இப்பேரணி, கோவில்பட்டி எம்.எஸ்.பி. வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. பின்னர், நற்பணிக் குழுவின் பொறுப்பாளர் ஜெயகணேஷ், ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், முத்துகணேஷ் ஆகியோர் கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் கோரிக்கை மனு அளித்தனர்.