ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது என்ற முடிவின்படி, வழக்குரைஞர்கள் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள்  சங்கத் தலைவர் ஏ.ஆர். பி.டி. கல்யாண்குமார் தலைமை வகித்தார். இதில் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் முத்துலிங்கம் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com