தூத்துக்குடி மாவட்டத்தில் போதை தடுப்புத் திட்ட நிதியுதவி பெற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலமாக போதை தடுப்பு திட்ட நிதியுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளபடி, போதை மற்றும் மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு தடுப்புத் திட்டத்தை செயல்முறைப்படுத்தும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2015-2016ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதியுதவியை பெற ஏதுவாக கருத்துருவை தயார் செய்யலாம். இத்திட்டத்துக்கான செலவினத் தொகை உயர்த்தப்பட்டுள்ள விவரம் http:socialijustice.nic.inpdfsch-drug என்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார் செய்யப்பட்ட கருத்துருவை இரு பிரதிகளாக இயக்குநர், சமூகப் பாதுகாப்புத் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 044-26426421 மற்றும் 26427022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.