மூதாட்டியின் ஏ.டி.எம். அட்டையில் பண மோசடி: சிறுவன் கைது

கோவில்பட்டியில் மூதாட்டியை ஏமாற்றி அவரது ஏடிஎம் அட்டை மூலம் பணத்தைத் திருடிச் சென்றதாக சிறுவன் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் மூதாட்டியை ஏமாற்றி அவரது ஏடிஎம் அட்டை மூலம் பணத்தைத் திருடிச் சென்றதாக சிறுவன் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த அய்யனேரி யாதவர் தெருவைச் சேர்ந்த பன்னாயிரம் மனைவி ஜெயலட்சுமி(63). இவர், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செவ்வாய்க்கிழமை சென்றாராம்.
அப்போது மையத்தினுள் நுழைந்த சிறுவன் ஒருவர், மூதாட்டியிடம் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, ஏ.டி.எம். அட்டையையும், ரகசிய அட்டையையும் பெற்று ரூ.4 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகள் மூலம் துப்புத்துலக்கி, பண மோசடியில் ஈடுபட்டதாக விளாத்திகுளத்தையடுத்த நாகலாபுரம் புதூரைச் சேர்ந்த 16 சிறுவனை  புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com