தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத் தலைமை வகித்தார். வங்கியின் இயக்குநர்கள் விக்ரமன், அரவிந்தகுமார், பொதுமேலாளர்கள் வி. குணசேகரன், கந்தவேலு, தேவதாஸ், ரவீந்திரன், நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வங்கியின் பெண் அலுவலர்கள் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். நிகழ்ச்சியில், வங்கி துணைப் பொதுமேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.