விளாத்திகுளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், "8வது ஊதிய திருத்த குழுவை உடனடியாக நியமித்து, இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் ரொக்க தொகை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறை செய்ய வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வருவாய் துறை பணியாளர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம், உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட  அரசு துறை சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com