திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5 மணிக்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாராயணமும், 6 மணிக்கு திருப்பாவை பாராயணமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட, ஆண்டாள் மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சல் மகா உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com