நாசரேத் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

நாசரேத் அருகே தையல் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாசரேத் அருகே தையல் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஞானராஜ் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துசெல்வன் (26). இவர், கோயம்புத்தூரில் தையல் கடை வைத்து தொழில் செய்துள்ளார். இவரது சகோதரர் முத்துக்குமரனுக்கும், நாசரேத் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் பா.கனகராஜ் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.
பொங்கலையொட்டி வியாழக்கிழமை சொந்த ஊருக்கு வந்த முத்துசெல்வன், கனகராஜிடம் இதுகுறித்து கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் கனகராஜ் முத்துசெல்வத்தை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த முத்துசெல்வன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து கனகராஜை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com