பள்ளி மாணவர்களுக்கான உலக திறனாய்வு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகளுக்கான உலக திறனாய்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகளுக்கான உலக திறனாய்வு போட்டி நடைபெற்றது.
வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்தோஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முனியசாமி போட்டியைத் தொடங்கிவைத்தார். இதில், கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவர், மாணவிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com