மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உடன்குடி அருகே மணிநகரில் மெளன ஊர்வலம், அன்னதானம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மணி நகர் சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு, பள்ளக்குறிச்சி ஊராட்சியின் முன் னாள் உறுப்பினர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார். திசையன்விளை சாலையில் உள்ள அரங்கில் ஊர்வலம் நிறைவுற்றது. அங்கு ஜெயலலிதா உருவப்படத்துக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் செந்தில் வேல், பெரியசாமி, அய்யாக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.