கோவில்பட்டி பகுதியில் மது விற்பனை: 6 பேர் கைது

கோவில்பட்டி மற்றும் புறநகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 79 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி மற்றும் புறநகர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 79 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, பகத்சிங் தெருவைச் சேர்ந்த சுந்தர்சாமி மகன் கணேசன், சோலைச்சாமி மகன் ஜோதி( 41) ஆகியோரை கைது செய்து,  11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் (பயிற்சி) பொன்ராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து சென்றபோது, பாரதி நகர் சத்தியநாதன் மகன் செல்வம்(28) கைது செய்யப்பட்டதுடன், 48 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  
கழுகுமலையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கியம் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, ஆறுமுகநகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் குருசாமி(34), அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த அங்கையர்கனி மகன் வேல்முருகன்(48) ஆகியோரை கைது செய்து, தலா 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி பாரதி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட்ராஜ் மகன் சேர்மதுரை (31)  நாலாட்டின்புத்தூர் துரைச்சாமிபுரம் பகுதியில் மது விற்றதாக,நாலாட்டின்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com