சந்தையடியூர் கோயிலில் பால்முறைத் திருவிழா நிறைவு

உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்களாக நடைபெற்றுவந்த பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்களாக நடைபெற்றுவந்த பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இத்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.விழாவையொட்டி, நாள்தோறும் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தர்மம் எடுத்தல், சந்தனக்குடம் எடுத்தல், சரவிளக்கு பூஜை, உம்பான் தர்மம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாள்தோறும் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இதில் உடன்குடி சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர். வரிதாரர்களுக்கு வரிப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அய்யா வழி இறைமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com