சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபஞ்சபிரம்ம அம்பிகை மடம் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பக்த பஜனை குழுவின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பழனிவேல், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜனை குழுவைச் சேர்ந்த ஐயப்பன் வரவேற்றார்.
அழகுசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மார்கழி மாதம் 30 நாள்களும் பக்த பஜனை குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பழனிவேல், சுடலைமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கார்த்திகேயன் நன்றி கூறினார்.