தச்சமொழி முத்துமாரியம்மன் கோயில் சப்பர பவனி

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது.

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் பஜனைக்குழுவின் 27ஆம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் கோயிலில் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.  காலை 9 மணிக்கு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரகார வீதிஉலா வருதல் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீமுத்துமாரியம்மன் மற்றும் பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பகதர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com